விழுப்புரத்தில் லாரி மோதி வட்டார வளமைய அலுவலர் காயம்

விழுப்புரத்தில் லாரி மோதி வட்டார வளமைய அலுவலர் காயமடைந்தாா்.

Update: 2023-01-31 18:45 GMT

கண்டாச்சிபுரம் தாலுகா ஆற்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சுபாஷ் (வயது 50). இவர் காணை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்சி அலுவலகத்தில் வட்டார வளமைய அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுபாசுக்கு இடதுதோலில் எலும்புமுறிவு ஏற்பட்டு காயமடைந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்