பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் பவித்ரா (வயது 31). இவருக்கும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த ராமராஜ் மகன் சந்தோஷ்குமார் (36) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சந்தோஷ் குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பவித்ராவிடம் அவருடைய கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் சந்தோஷ்குமார், மாமனார் ராமராஜ், மாமியார் ஜோதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்