மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
காட்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது.;
வேலூர் மின்பகிர்மான வட்டம், காட்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்வு கூட்டம் காட்பாடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடக்கிறது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் மதியழகன் தலைமை தாங்குகிறார்
கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மின் நுகர்வோர்வர்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.