மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

Update: 2023-05-26 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் காலை 11 மணியளவில் நடக்கிறது. விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதியும், கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 13-ந் தேதியும், செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 20-ந் தேதியும், திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 27-ந் தேதியும் நடக்கிறது. எனவே மின் நுகர்வோர், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும். இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மதனகோபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்