மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்;
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.