மது போதையில் விழுந்த முதியவர் சாவு

மது போதையில் விழுந்த முதியவர் இறந்தார்.;

Update:2023-02-27 00:15 IST

ஆனைமலை, 

ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஞான சம்பந்தன் (வயது 62), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி அங்கலகுறிச்சியில் இருந்து பஸ்சில் சென்று, சங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் தள்ளாடியபடி சாலையோரத்தில் விழுந்தார். அதன் பின்னர் 2 நாட்களாகியும் ஞானசம்பந்தன் எழவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, ஞானசம்பந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்