நாளை மின்சாரம் நிறுத்தம்

இலக்கியம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update:2022-09-07 22:13 IST

தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கடம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்