மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-25 19:25 GMT


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை காலியிடங்களை 100 சதவீதம் நிரப்பும் பொருட்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்