கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு போலீஸ் நடவடிக்கை

கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசாா் அழித்தனா்.;

Update:2022-08-26 22:29 IST


கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள தெற்குப்பட்டி மாங்கனி தோட்டம் வனப் பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் அமைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் தெற்குப்பட்டி மாங்கனி தோட்டம் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் 15 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து, அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்