விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2023-08-03 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள நிறைமதிகுடிகாட்டை சேர்ந்தவர் செல்வம்(வயது 47). விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர், விவசாய மோட்டார் கொட்டகையில் வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதை அங்கு சென்றவர்கள் பார்த்து, அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்