காரைக்குடி
காரைக்குடி லட்சுமி நகரில் வசிப்பவர் செல்வராஜ். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 45). காரைக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள படுக்கை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.