விபத்தில் மீனவர் சாவு

திருவாடானை அருகே விபத்தில் மீனவர் இறந்தார்.;

Update:2023-06-27 00:08 IST

தொண்டி, 

திருவாடானை தாலுகா நம்புதாளை படையாட்சி தெருவை சேர்ந்தவர் நாகூர் பிச்சை (வயது 40).மீனவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது சம்பை கிராமத்தின் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்