ஏரியில் மூழ்கி மீனவர் பலி

சின்னசேலத்தில் ஏரியில் மூழ்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-14 18:45 GMT

சின்னசேலம் ,

சின்னசேலம் மீனவர் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் பாலகிருஷ்ணன் (வயது 38). மீன் பிடிக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி தங்கமணியிடம் சின்னசேலம் ஏரிக்கு மீன் பிடிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆனபிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது மீன் வலை ஏரியில் விரிக்கப்பட்டு இருந்ததை அவர்கள் பார்த்தனர். ஆனால் அங்கு பாலகிருஷ்ணன் இல்லை. இதனால் பாலகிருஷ்ணன் நீரில் மூழ்கி இருக்கலாம் என அவர்கள் சந்தேகத்தினர். இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் இறங்கி பாலகிருஷ்ணனை தேடினர். இதில் பாலகிருஷ்ணனை அவர்கள் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலகிருஷ்ணன் ஏரியில் மீன்பிடிக்கும் போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்