2 விசைப்படகுகளை சிறைபிடித்த மீனவர்கள்

2 விசைப்படகுகளை மீனவர்கள் சிறைபிடித்தனர்.

Update: 2023-08-24 18:45 GMT

தொண்டி, 

தொண்டி கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் விதிகளை மீறி கரையோர மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் நாட்டுப்படகு மீனவர்கள் தமிழக அரசுக்கும், மீன் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 கடல் மைல் தூரத்தில் 2 விசைப்படகுகள் இழுப்பு வலை மூலம் மீன் பிடித்துள்ளனர். இதனை அறிந்த நம்புதாளை நாட்டுப்படகு மீனவர்கள் 2 விசை படகுகளையும் சுற்றி வளைத்து சிறைபிடித்து நம்புதாளை கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கடலோர காவல் படை மற்றும் மீன் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா, மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹீர் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.  

Tags:    

மேலும் செய்திகள்