களக்காடு மலையில் காட்டுத்தீ

களக்காடு மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து சேதம் அடைந்தன.;

Update:2023-06-11 00:40 IST

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் அடித்து வருகிறது. மழை பெய்யாததால் அருவி, நீரோடைகள் வறண்டு வருகின்றன. இந்நிலையில் கருங்கல்கசம் பீட் யானைக்கால் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி பற்றி எரிந்து வருகிறது. தீயினால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் கருகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்