கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி

ஓசூரில் வங்கி விவரங்களை கேட்டு கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-04 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள முதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் அம்ரிஷ் (வயது 43). வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் 24-ந் தேதி தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி உள்ளார். தொடர்ந்து அந்த நபர், அம்ரிசின் வங்கி விவரங்களை பூர்த்தி செய்ய அவரது கம்ப்யூட்டரில் 'எனி டெஸ்க்' எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறி உள்ளார். இதையடுத்து அம்ரிஷ் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த நபர், அந்த செயலி மூலம் அம்ரிசின் கம்யூட்டரை பயன்படுத்தி உள்ளார். மொபைலில் பேசியவாறு அம்ரிசின் வங்கி விவரங்களை வாங்கி, அவரின் கண் முன்னே, அவர் வங்கி கணக்கில் இருந்து, ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் எடுத்துவிட்டு அந்த நபர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அம்ரிஷ் அதிர்ச்சியடைந்தார். இந்த பணம் மோசடி குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்