கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி உஷாராணி (வயது 55) இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கோவை என்.எச். ரோட்டை சேர்ந்த கார்த்திக், வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் ஏலச்சீட்டு நடத்தியதாகவும்.அவர்கள் தன்னிடம் ரூ.2லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து உக்கடம் போலீசார் கார்த்திக், வீரலட்சுமி, சித்திக், ஆகியோர் மீது மோசடி சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.