30 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு

திருப்பத்தூர் அருகே 30 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.

Update: 2022-06-12 12:36 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள கட்டேரி ஊராட்சியில் பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச ஏரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.மாதவன் தலைமை தாங்கி முதல்கட்டமாக 30 பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கினார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஊர் கவுண்டர் ஜெகன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பாத்திமா சாது மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்