ஏழை குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு

கொரட்டி ஊராட்சியில்ஏழை குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்புகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-06-28 15:26 GMT

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி ஊராட்சியில் உஜ்வலா திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, துரை முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, மின்சார வாரிய செயற்பொறியாளர் அருள் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்