ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update:2023-03-27 00:15 IST

கோவை

கோவை சேரன்நகர் பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி 1½ டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற கோவை வெள் ளாளப்பட்டியை சேர்ந்த பாபு (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து அவர், பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள பாபுவிடம் அதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்