தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

சங்கராபுரம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-08-29 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த நிர்மலா (வயது 23) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பபிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நிர்மலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

.இது குறித்து நிர்மலாவின் அண்ணன் பிரகாஷ் என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 7 ஆண்டுகளில் நிர்மலா இறந்துள்ளதால், அவரது சாவு குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்