தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை;

Update:2023-02-04 00:15 IST

ஆழியாறு

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள புளியங்கண்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் பாவனா (வயது 18). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு அருகில் உள்ள ஷெட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட உறவினர்கள், ஆழியாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாவனா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்