தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

குறிஞ்சிப்பாடி அருகே கல்லூரியில் படிக்க வைக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-11 19:11 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் குணசுந்தரி(வயது 45). இவரது மகள் அருணா(20). பிளஸ்-2 முடித்துள்ள இவர், கல்லூரியில் படிக்க விரும்பினார். இது தொடர்பாக அவர், தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மேல்படிப்பு படிக்க வைக்கவில்லை. இதையடுத்து அருணா, வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு தாயிடம் கேட்டார். அதற்கும் அவர் அனுமதிக்கவில்லை.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அருணா, வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து சென்று அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்