காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-10-24 19:00 GMT

காரைக்குடி, 

அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற புதுவயல் வித்யாகிரி கல்லூரி பட்டமளிப்பு விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீவித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமதுமீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். 16 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று பதக்கம் பெற்றனர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு விருது, பரிசு தொகை வழங்கப்பட்டது. விழாவில் 844 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். சோகோ நிறுவன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு காணொலி மூலம் பேசினார்.

பன்னாட்டு நிறுவனமான பூமி குழும நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, பா.ஜனதா மூத்ததலைவர் எச்.ராஜா, தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்