589 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி துதஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-09-29 20:18 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) காந்திஜெயந்தி தினத்தன்று காலை 11 மணிக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே கிராமசபை கூட்டத்திற்கு தஞ்சை மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராமசபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்