மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Update: 2022-06-17 13:48 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் தபால் நிலைய வீதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 63). இவருக்கு கண் பார்வை சரியாக தெரியாததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து கண் வலி ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெயலட்சுமி  உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்