மானாமதுரையில், 14-ந்தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மானாமதுரையில், 14-ந்தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2023-03-09 18:45 GMT


மானாமதுரை கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 14-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மானாமதுரையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமை தாங்குகிறார்.. எனவே மானாமதுரை கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இந்த தகவலை மின்மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்