மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது;
திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.
அதன்படி அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூரில் உள்ள செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இந்த தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.