மளிகை கடைக்காரர் தற்கொலை

கே,.வி.குப்பத்தில் மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-09-27 00:11 IST

கே.வி.குப்பம்

கே,.வி.குப்பத்தில் மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கே.வி.குப்பம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவா் கோவிந்தன் (வயது 48), மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்திரி.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே, குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கோவிந்தன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்