மளிகை கடைக்காரர் தற்கொலை
கே,.வி.குப்பத்தில் மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கே.வி.குப்பம்
கே,.வி.குப்பத்தில் மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கே.வி.குப்பம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவா் கோவிந்தன் (வயது 48), மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்திரி.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே, குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கோவிந்தன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.