ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை

ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை

Update: 2023-02-13 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் லட்சுமணராஜ் (வயது 37). இவர் நேற்று தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து, அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்