போடியில் 1 மணி நேரம் பலத்த மழை

போடியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.;

Update:2023-10-11 00:15 IST

போடி மற்றும் அதனை சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மலைப் பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, மேலப்பரவு, சிறைக்காடு, மரிமூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலையிலும் மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்