அந்தியூரில்ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூரில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.;

Update:2023-08-18 03:29 IST

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர், வட்டக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 157 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் நிலக்கடலை (பச்சை) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 539-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நிலக்கடலை (காய்ந்தது) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 269-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 889-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நிலக்கடலை மொத்தம் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 459-க்கு ஏலம் போனது.

ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து நிலக்கடலையை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்