கரூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி

கரூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

Update: 2022-06-20 19:35 GMT

கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல்பரிசு ரூ.5 ஆயிரத்தை பிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், 3-ம் பரிசு ரூ.ஆயிரத்தை மோகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 4-ம் பரிசு ரூ.ஆயிரத்தை அரசகவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் பெற்றனர். பின்னர் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்