மெஞ்ஞானபுரத்தில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

மெஞ்ஞானபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-08-02 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

திருச்செந்தூர் கோட்ட மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நேற்று மெஞ்ஞானபுரம் மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்தது. முகாமில் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். முகாமில் தூத்துக்குடி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கலந்து கொண்டு நுகர்வோர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

முகாமில் செயற்பொறியாளர் சங்கரபாண்டியன், உதவி செயற் பொறியாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரகுமார், முத்து பாலசுந்தர், உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) மகேஸ்வரி, மகாலிங்கம், மதிப்பீட்டு அலுவலர் கணேசன், உதவி கணக்கு அலுவலர் (பொறுப்பு) முனியசாமி உள்பட மின்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்