தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-17 15:23 GMT

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மடத்துர் மெயின் ரோடு, சிப்காட் வளாகம், ராஜீவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், 3- வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி. காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், சில்வர்புரம், சுப்பிரமணிய புரம், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், பால்பாண்டி நகர், ஆசீர்வாத நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலணி, சின்னக்கண்ணு புரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம், முருகேசநகர், அகில இந்திய வானொலி நிலையம், கதிர்வேல் நகர், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், அமுதா நகர், புஷ்பா நகர், கால்டுவெல் காலனி, செல்சீலி காலனி, 3 செண்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்