பாலக்கோட்டில்தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு

Update: 2023-05-31 05:00 GMT

பாலக்கோடு

பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 பள்ளி வாகனங்களில் முதல் கட்டமாக 85 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பஸ்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து டிரைவர்களுக்கு செயல்விளக்கமும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அனைப்பது குறித்தும் விளக்கி கூறினர். ஆய்வின் போது குறைபாடுகளுடைய 7 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின் போது பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்