காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்

Update: 2023-10-16 18:45 GMT

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் போலீசாா் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்