குத்துச்சண்டை போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை

குத்துச்சண்டை போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-12-07 19:01 GMT

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி உள்பட 30 கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி பெற்று ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் 2-ம் இடம் பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் பாராட்டினர்

Tags:    

மேலும் செய்திகள்