ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஆண், பெண் தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-04 18:00 GMT

ஜோலார்பேட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண், பெண் தற்கொலை

திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே திருப்பத்தூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் 50 வயதுடைய ஆணும், 45 வயதுடைய பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தண்டவாளத்தில் இருவரும் இணைந்து ஒரே இடத்தில் தலை வைத்து படுத்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் சக்கரத்தில் சிக்கி அவர்கள் இருவரது தலையும் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பதியா? போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்து கொண்ட பெண்ணிடம் பெங்களூரு கணேஷ் ஜூவல்லர்ஸ் என்ற மணிபர்சு இருந்துள்ளது. இதனால் அவர்கள் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் தம்பதியாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதனால் இவர்களது அடையாளம் காண பெங்களூரு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்