வாலிபருக்கு அடி-உதை

விழுப்புரம் அருகே வாலிபருக்கு அடி-உதை

Update: 2023-03-07 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 35). இவரது நண்பர்கள் சிலர், விழுப்புரம் ஜானகிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து மது அருந்தி வந்தனர். இதனால் விஜயகுமார், தனது நண்பர்களிடம் சரவணனுடன் சேர வேண்டாம் எனக்கூறி வந்துள்ளார். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த சரவணன் உருட்டு கட்டையால் விஜயகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்