கூத்தாநல்லூர் பகுதியில் 2-வது நாளாக மழை
கூத்தாநல்லூர் பகுதியில் 2-வது நாளாக மழை
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்றுமுன்தினம் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. நேற்று 2-வது நாளாக கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பொதக்குடி, பூதமங்கலம், கோரையாறு, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், குடிதாங்கிச்சேரி, ராமநாதபுரம், பழையனூர், நாகங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், ஓவர்ச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், வயல்களிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது.