குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் திங்கட்கிழமை விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.

Update: 2023-10-16 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்தக் கோலத்தில் அம்மனை தரிசித்தால் ராகு தோஷம் நீங்கி கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இரண்டாம் நாளான நேற்று காலை முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு கற்பக விருச்சிக வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்