எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-10-15 00:40 IST

அரக்கோணம் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரக்கோணம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. முகவர்கள் சங்க தலைவர் பொன்.சிட்டிபாபு தலைமை தாங்கினார். செயலாளர் தருமன் வரவேற்றார். கோட்ட இணை செயலாளர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். இதில் வேலூர் கோட்ட சங்க இணை செயலாளர் எம். முரளி கலந்து கொண்டு முகவர்களின் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்