மது பாட்டில்கள் விற்றவர் கைது
மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
வாணாபுரம்,
பகண்டை கூட்டு ரோடு சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் மதுபாட்டில் விற்று கொண்டிருந்த நாகல்குடி காலனியை சேர்ந்த தடிகாரன் மகன் பீமன் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.