மது விற்றவர் கைது

கூடுவாஞ்சேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-19 13:58 IST

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையின் அருகே மதுபானங்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசார் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். இந்த சோதனையில் டாஸ்மாக் கடை அருகில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 37), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்