சாராயம் விற்றவர் கைது

ரிஷிவந்தியம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-01 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே மையனூரில் பகண்டைகூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (வயது 29) என்பவர் தனது வயலில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்