சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-15 16:42 GMT

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மாணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). இவர் திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகே சாராய விற்றபோது திருவண்ணாமலை தாலுகா போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்