லாரி மோதி சத்துணவு அமைப்பாளர் பலி

லாரி மோதி சத்துணவு அமைப்பாளர் பலியானார்.

Update: 2023-10-25 20:48 GMT

மேச்சேரி:-

மேச்சேரி சுப்பரமணியநகரை சேர்ந்த ஜெகநாதன் மனைவி சாந்தி (வயது54). இவர், வீரப்பனூரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் மேச்சேரி பஸ் நிலையம் அருகே மொபட்டில சென்ற போது பின்னால் வந்த டிப்பர் லாரி, சாந்தி ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்