அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம் கிடந்தது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-10-02 00:08 IST

அரக்கோணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆண் பிணம் கிடந்தது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் ரெயில் நிலையம் 3-வது பிளாட்பாரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்