ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது

ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-01 18:45 GMT

ராமநாதபுரம் அருகே புத்தேந்தலை சேர்ந்தவர் பால்சாமி(வயது 48). இவரும், மங்கை என்பவரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை புத்தேந்தல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் 2 ஆடுகளை திருடி சென்றார். இதுகுறித்து பால்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து விசாரித்து புல்லங்குடியை சேர்ந்த பாஸ்கரனை(வயது 37) கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்